‘நீர்வளத்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம்’-முதல்வர் விஜய் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் நீர்வளத்துறை சார்ந்த மிக முக்கியமான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு , துறை வாரியாக நடைபெற்று வரும் ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த உயர்மட்டக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் நீர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் நேரில் பங்கேற்றனர்.

தமிழகத்தின் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட வேண்டிய நதிநீர் இணைப்புப் பணிகள் மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக நீர் மேலாண்மை மற்றும் முன்னுரிமை அளிக்க வேண்டிய நீர் திட்டங்கள் தொடர்பாக சில முக்கியக் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அரசுக்குத் தெரிவித்திருந்தார். அந்தப் பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த ஆய்வுக்கூட்டம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எனவே பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, நீர்வளத்துறை சார்ந்த இந்த கூட்டம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Source link