பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளி; இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு

சென்னை: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 24) எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்., – சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணியின் தொடர் அமளியால் எந்த அலுவல்களும் நடக்கவில்லை. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என, அக்கூட்டணி வலியுறுத்தி வருகிறது. கடந்த 4 நாட்களாக இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் (ஜூலை 24) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

ராஜ்யசபா

அதேபோல் ராஜ்யசபாவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

போராட்டம்

பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘டிஸ்மிஸ் பிரதான்’ என்ற பெரிய வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Source link