இதையடுத்து, ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் தொடங்க உள்ள நிலையில், அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த இருப்பதாகக் கரப்பான் பூச்சி கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் (20-07-26) நாடாளுமன்றம் கூட உள்ளது. அன்று, இவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த இருந்தனர் . இந்நிலையில், போராட்டத்தில் இருந்த சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, ஆளும் தரப்பினர் சர்வாதிகாரமாக நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டிய கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் . மேலும், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் அதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அப்போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவர் மீது மை வீசினார்.
தொடர்ந்து பேசிய தீப்கே, ” தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து அகற்றச் சொன்னால். அதிகாரத்தில் இருப்பவர்கள் சோனம் வாங் சுக்கை போராட்ட களத்தில் இருந்து அகற்றுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது ஆளும் கட்சியின் சர்வாதிகார போக்கைக் காட்டுகிறது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. அதனால், பிரதமர் நரேந்திர மோடியைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறோம்.
இதனிடையே, சோனம் வாங்சுக் மருத்துவமனையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக அவரது மனைவி கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
