புதிய உணவு விநியோகச் சேவையானது, பிரதான பிளிப்கார்ட் செயலியிலும் மற்றும் ஒரு தனிச் செயலி மூலமாகவும் கிடைக்கும். இந்தச் சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன், முதலில் இதனை பெங்களூருவில் தொடங்க பிளிப்கார்ட் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்குள் சேவையை தொடங்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தச் சோதனை முயற்சியைத் தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக தனி மொபைல் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இருப்பினும், இந்தச் சேவையின் பெயர் மற்றும் அது செயல்படத் தொடங்கும் முதல் நகரம் குறித்த விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்திய ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் Zomato, Swiggy நிறுவனங்கள் முன்னணி வகித்து வருகிறது. அதாவது, Zomato சுமார் 57 சதவீதப் பங்கையும், Swiggy 43 சதவீதப் பங்கையும் கொண்டிருந்தன.
