சரிந்த மண்ணை அள்ளுதல், காடு மற்றும் செடி கொடிகளை அகற்றுதல் போன்ற பணிகளுக்கான இந்த ஆன்லைன் டெண்டர்களில் தளப் பார்வையிடல் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இது பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்ததாரர்களின் புகார்களைத் தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த 22 டெண்டர்களையும் நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் சட்டத்திற்கு உட்பட்டே டெண்டர்கள் ஒதுக்கப்படும் என்ற அரசின் நிலைப்பாடு நேர்மையானவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், குறுக்கு வழியில் செல்லும் அதிகாரிகள் இடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விதமான தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் பொழுது முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன், அரசு நிதியை துஷ்பிரயோகம் செய்வதும் தடுக்கப்படும். நீர்வள ஆதாரத் துறையின் கீழ் உள்ள பலவிதமான பராமரிப்புப் பணிகள், கால்வாய் தூர்வாருதல் மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் தொடர்பான டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதன் மூலம் முறைகேடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
