காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியமில்லை எனக் நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூஷன் தெரிவித்த பதில் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிராக அமைந்துள்ள அந்த தவறான பதவலை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். காவிரியைக் நம்பியுள்ள கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல், மேலமைந்துள்ள மாநிலங்கள் தன்னிச்சையாக அணை கட்ட முடியாது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட இயலாது. கீழ்மடை மாநிலங்களுக்குச் செல்லும் நீரின் அளவைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் பிற மாநிலங்களின் சம்மதமின்றிச் செயல்படுத்த முடியாது என்பதால், காவிரிப் பாசன மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மாநிலங்களின் உரிமைகளையும் காக்கும் வகையில் பிரதமர் மோடி இதில் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வயதுக்கு மீறிய எடை… கண்ணுக்கு தெரியாத ஆபத்து..!! குழந்தைகளை சைலன்ட்டாக தாக்கும் பிரச்சனை..!!
