ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பிரம்மாண்ட உலகம்… இனி ஹரப்பா தெருவில் நாமும் நடக்கலாம்; குஜராத் மியூசியம்

எழுதியவர் : திவ்யா

உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகச் சிந்து சமவெளி நாகரிகம் கருதப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சிந்து சமவெளி மக்கள் பரவியிருந்ததாகப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. சிந்து சமவெளியின் நாகரிகத் தடங்கள், கைவிடப்பட்ட நகரங்கள் இன்றைய பாகிஸ்தானில் மட்டுமல்ல; வட இந்தியாவின் பல இடங்களிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க

குறிப்பாக, குஜராத்தில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கட்ச் பிராந்தியத்தில் உள்ள தோலவிரா (Dholavira), அகமதாபாத் அருகே உள்ள லோத்தல் (Lothal) ஆகியவை இதில் அடங்கும். சிந்து சமவெளி நாகரிகத் தொல்லியல் தலங்களில் இந்தியாவில் அமைந்துள்ள முதன்மையான தலம் தோலவிரா. சிந்துவெளி நாகரிகத்தின் எட்டு நகரங்களில் ஐந்தாவது மிகப் பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது. 

அடுத்ததாக லோத்தல் உள்ளது. இந்நிலையில், சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற ஒரு பழங்காலத் தளமான லோத்தல் நகருக்குச் செல்லும் பார்வையாளர்கள், விரைவில் ஹரப்பா காலத்து வீதிகள், கப்பல் கட்டும் தளங்கள், சந்தைகள் மற்றும் பொது இடங்களுக்குள் நேரில் நடந்து செல்வது போன்ற ஒரு விசித்திரமான உணர்வைப் பெற உள்ளனர்.

அகமதாபாத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருள் தளத்திற்கு மிக அருகில், கட்டிடக் கலைஞர்கள் பழங்கால நகரத்தின் பகுதிகளை ஒரு பிரம்மாண்ட அருங்காட்சியகத்திற்காக மீண்டும் அப்படியே உருவாக்கி வருகின்றனர். இது ரூ. 4,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ‘தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின்’ (National Maritime Heritage Complex – NMHC) ஒரு முக்கியப் பகுதியாக அமையவுள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இன்னும் சில வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட உள்ளன.

Source link