விநாயகர் சதுர்த்திக்கு சிலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்..!! இது தெரிஞ்சிக்காம வாங்காதீங்க..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்கள் மற்றும் கர்மவினைகளில் இருந்து விடுபட விநாயகர் சதுர்த்தி மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத வகையில், விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட புதிய சிலையை வீட்டில் வைத்து பூஜித்து, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. களிமண் தண்ணீரில் கரைவது போல, நமது பாவங்களும் கர்மவினைகளும் கரைய வேண்டும் என்ற உயரிய தாத்பரியமே இதன் பின்னணியில் உள்ளது.

விநாயகர் சிலை என்பதற்காகக் கடைகளில் கண்ணில் படும் சிலைகளையெல்லாம் வாங்கிவிடக் கூடாது என சாஸ்திரங்களும் வாஸ்து விதிகளும் எச்சரிக்கின்றன. தவறான அமைப்பிலான சிலைகளை வீட்டில் வைத்தால் வழிபாட்டின் முழுமையான பலன் கிடைக்காமல் போகலாம். வீட்டில் வைத்து வழிபடுவதற்கு எப்போதும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் விநாயகர் சிலையையே தேர்வு செய்ய வேண்டும்; நின்ற கோலத்திலோ அல்லது நடனமாடும் அமைப்பிலோ உள்ள சிலைகளையோ, திருஷ்டி விநாயகர் சிலைகளையோ வீடுகளில் வைக்கக் கூடாது.

மேலும், விநாயகரின் துதிக்கை இடதுபுறமாக வளைந்திருக்க வேண்டும் (இடம்புரி விநாயகர்); சிலை சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு போன்ற மங்களகரமான வண்ணங்களில் இருப்பது விசேஷமானது. சுவாமியின் கையில் பிரசாதம் (மோதகம்) இருப்பதும், அருகில் மூஷிக வாகனம் அமர்ந்திருப்பதும், சுவாமியின் கண்கள் மலர்ந்து நம்மைப் பார்ப்பது போன்ற அமைப்பில் இருப்பதும் மிக முக்கியமாகும். இத்தகைய சாஸ்திர விதிகளுக்கு உட்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வழிபடுவதன் மூலம் சகல காரியத் தடைகளும் நீங்கி, இல்லத்தில் மகிழ்ச்சியும் விநாயகரின் பரிபூரண அருளும் பெருகும்.

டெல்லியில் சீன அதிபர் இறக்கிய ‘Hongqi N701’ சொகுசு கார்..!! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?

Next Post

Sun Sep 13 , 2026

இந்து தர்மத்தில் எந்தவொரு மங்கல காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முன்னிறுத்தி வழிபடுவது தொன்றுதொட்டு வரும் மரபாகும். விநாயகரை எந்த ரூபத்தில் வழிபட்டாலும் நற்பலன்கள் கிட்டும் என்றாலும், ஜோதிட ரீதியாக 12 ராசிக்காரர்களும் தங்களுக்குரிய குறிப்பிட்ட கணபதி வடிவங்களையும், அதற்கான பிரத்யேக மூல மந்திரங்களையும் ஜெபித்து வழிபடுவது இரட்டிப்புப் பலன்களைத் தரும் என ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. மேஷ ராசியினர் சம்மந்த விநாயகரையும், ரிஷப ராசியினர் […]

Vinayagar 206

Source link