விபத்தில் உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாஜி அமைச்சர் கோரிக்கை!

ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி பனங்குளம் கிராமத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவி தனிஷ்காதேவி குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்க முன்னாள் அமைச்சரும், ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிவ.வீ.மெய்யநாதன் முதல்வர் அலுவரகத்திற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள உள்ள பனங்குளம் வடக்கு கிாமத்தைச் சேர்ந்த ரவி(50). அரசர்குளம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர். இவரது மகள்கள் தர்னிகாதேவி (17), தனிஷ்காதேவி(15). இருவரும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளனர். இன்று காலை 10 மணிக்கு ஆலங்குடி அரசு நீட் பயிற்சி மையத்திற்கு தர்னிகாதேவியை அனுப்பவும், தனிஷ்காதேவிக்கு ஆதார் திருத்தம் செய்யவும் பள்ளி சீருடையில் ஒரு மோட்டார் சைக்கிளில் ரவி அழைத்துச் சென்ற போது அதிவேகமாக சென்ற அரசு பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட தனிஷ்காதேவி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ரவி, தர்னிகாதேவி  மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த மறமடக்கி வெற்றிவேல் ஆகியோர் அதே பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவி தனிஷ்காதேவி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் நிவாரணமும் வழங்க நடவடிக்கை எடுக்கவும், மேலும் இனிமேல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகச் சென்று விபத்துகள் ஏற்டுத்துவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Source link