விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு : இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரிய மனு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் குறித்தும், தவெக கட்சியின் தலைவரான விஜய் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில் தான் தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் கொடுத்த புகாரின் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட தற்போது அவர் ஜெயிலில் உள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி தற்போது ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தார். ஏற்கனவே காவல்துறையினர் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் கைது செய்துள்ளதாகவும் அவரை விடுவிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும், அத்துடன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

Source link