சண்டிகர்: ஹரியானாவில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர்.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் ஒருவரை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிக்கிறது.
மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்,. இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சோட்டேலால், தீன்தயாள், ஷிவ்காந்த் மற்றும் இந்திரஜீத் என அடையாளம் காணப்பட்டனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
