எலான் மஸ்க்கிற்கு சவால் விடும் இந்தியர்: விண்வெளிக்கு பறந்த இந்தியாவின் தனியார் நிறுவன ராக்கெட்!

இந்த நிறுவனத்தை நடத்துவது அவர்கள் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.அவர்களின் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவது பெரிய சவாலாக இருந்தது. பவன் குமாரின் மீது நம்பிக்கை வைத்திருந்த அவரது கல்லூரி நண்பரான பின்னி பன்சால் , நிறுவனத்தில் 1.5 மில்லியன் டாலர் முதலீடு செய்தார். இவர் நாட்டின் மிகப்பெரிய ஈ காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கிரீன்கோ நிறுவனமும் இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தது.

2020 ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது முதல் ராக்கெட் இன்ஜினை வெற்றிகரமாக சோதித்து சாதனை செய்தது. இந்த ராக்கெட் இன்ஜினுக்கு அவர்கள் ராமன் –1 என்று பெயரிட்டனர். அதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு விக்ரம் –S என்ற இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டினை விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தினர்.

மத்திய அரசு தனியார்களுக்கு விண்வெளி துறையை திறந்து விட்ட பிறகு , இஸ்ரோ நிறுவனத்துடன் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு 51 மில்லியன் டாலர்கள் கிடைத்தது.2026 மே 7 தேதி பிரதமர் நரேந்திர மோடியால் , ஸ்கைரூட் நிறுவனத்தின் ராக்கெட் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது.

Source link