எழுதியவர் : சந்தீப்
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜாம்பவான் மேனேஜரான அலெக்ஸ் பெர்குசனுக்கு இன்றும் ஒரு பெரிய ஏக்கம் மனதுக்குள் இருக்கிறது. 2009 மற்றும் 2011 ஆகிய இரு சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிகளிலும் மெஸ்ஸியை அவரால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. “மெஸ்ஸியை நிறுத்த வேண்டும் என்றால், அவருக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அவன் தலைக்கு மேலே போய் விழத் தயாராக இருக்கும் சென்டர்-பேக் (Centre-backs) டிஃபெண்டர்கள் உங்களுக்குத் தேவை” என்று பெர்குசன் தனது சுயசரிதையில் எழுதியிருந்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க
மேலும், அடுத்த முறை பார்சிலோனாவுடன் விளையாடும்போது அவனை எங்களைச் சித்திரவதை செய்ய விடமாட்டேன் என்றும் அவர் எழுதியிருந்தார். ஆனால், அந்த அடுத்த முறை அவருக்கு வரவே இல்லை. மெஸ்ஸியின் அசாத்திய திறமையால் வியூகங்கள் தவிடுபொடியான ஒரே மேனேஜர் பெர்குசன் மட்டுமல்ல. மைக் டைசன் எழுதியது போல, “முகத்தில் ஒரு குத்து வாங்கும் வரை எல்லாரிடமும் ஒரு பிளான் இருக்கும்”. மெஸ்ஸியின் அசுர ஆட்டத்தை எதிர்கொள்ளும் வரைதான் மற்றவர்களின் திட்டங்கள் எல்லாம்.
தியரியில் மெஸ்ஸியை நிறுத்த பல வழிகள் இருக்கலாம், ஆனால் பிராக்டிகலாக உங்களை வீழ்த்த அவனிடம் ஏகப்பட்ட வழிகள் உள்ளன. “ஒரு காலத்தில் என்னை நிறுத்த பிஸ்டல் போதும் என்று சொன்னார்கள், ஆனால் இன்று மெஸ்ஸியை நிறுத்த மெஷின் கன்னே தேவை” என்று பார்சிலோனாவின் முன்னாள் வீரர் ஹிரிஸ்டோ ஸ்டோய்ச்கோவ் பாராட்டியுள்ளார்.
15 நிமிடத்தில் 4 கோல் – ஸ்பெயின் மேனேஜரின் நேரடி அனுபவம்
ஸ்பெயின் அணியின் தற்போதைய மேனேஜரான லூயிஸ் டி லா ஃபியூன்டே தனது 2004-ஆம் ஆண்டு அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அப்போது மெஸ்ஸியின் திறமை உலகிற்குப் பெரிய அளவில் தெரியாத ஆரம்பக் காலம். “நாங்கள் ஸ்பானிஷ் கப்பில் பார்சிலோனாவை எதிர்கொள்ளச் சென்றபோது, மெஸ்ஸி என்ற சிறுவனைப் பற்றிப் பல புகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டேன்.
அதனால் ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு ‘மேன்-டு-மேன் மார்க்கிங்’ (Man-to-man marking) போட்டேன். 70-வது நிமிடம் வரை ஸ்கோர் 0-0 என இருந்தது. மெஸ்ஸியை மார்க் செய்த என் வீரருக்கு மஞ்சள் கார்டு காட்டப்பட்டதால், நான் அவரை வெளியே எடுத்தேன். அடுத்த 15 நிமிடத்திற்குள் மெஸ்ஸி 4 கோல்களை அடித்து எங்களை துவம்சம் செய்துவிட்டான். மெஸ்ஸி கால்பந்து உலகிற்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிறது, இன்று அவனைத் தடுக்கப் போகும் பாவ் குபார்சி போன்ற இளம் வீரர்கள் அப்போது பிறக்கவே இல்லை என்றார்.
மெஸ்ஸியை எப்படித்தான் நிறுத்துவது?
பெர்குசனின் பிளானை அடிப்படையாக வைத்து பல அணிகள் மெஸ்ஸியை மைதானத்தின் வலது ஓரமாக தள்ளி, அவருக்கு லாங் பாஸ்கள் மற்றும் டயகனல் பாஸ்கள் கொடுக்க இடம் தராமல் நெருக்கடி கொடுக்கின்றன. இங்கிலாந்து மற்றும் எகிப்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மெஸ்ஸியின் பாஸ்கள் ஆபத்தாக இருந்தன. எகிப்து அணி மைதானத்தின் நடுப்பகுதியை மொத்தமாக முடக்கி, அவரை விங்ஸ் பகுதிக்குத் தள்ளியது. ஸ்பெயின் அணி மெஸ்ஸிக்கு எதிராக லோ பிளாக் (Low block) போடாமல், அவர் பந்தைப் பிடிக்கும்போதே தீவிரமாகத் துரத்தி நெருக்கடி கொடுக்கும் வியூகத்தைக் கையாளலாம்.
மெஸ்ஸியால் மிகக் குறுகிய இடங்களிலும் 2 அல்லது 3 டிஃபெண்டர்களை ஏமாற்றிப் பந்தைக் கடத்த முடியும். ஆனால், அவர் பந்தைப் பெறும்போது பின்னால் இருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஆபத்தான ஆட்டத்தைத் தவிர்த்து அருகில் இருக்கும் சக வீரருக்குப் பாஸ் செய்யவே விரும்புவார்.
ஜோஸ் மொரின்ஹோ 2010-ல் இன்டர் மிலன் அணியை வைத்துச் செய்தது போல ஒரு ‘கூண்டு’ போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். ஜேவியர் சானெட்டி, எஸ்டிபன் காம்பியாசோ மற்றும் தியாகோ மோட்டா ஆகியோரின் முக்கோண மார்க்கிங் மூலம் மெஸ்ஸியை முடக்கினர். மேலும், மெஸ்ஸிக்கு பந்து சப்ளை செய்யும் ரோட்ரிக் டி பால் மற்றும் என்ஸோ பெர்னாண்டஸ் போன்றவர்களையும், ரைட்-பேக் டானி ஆல்வஸையும் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், டிஃபெண்டர்கள் அவரை கணிக்கத் திட்டமிடுவது போலவே, மெஸ்ஸியும் தன்னைத் தடுக்க வரும் வீரர்களைப் பற்றி முன்கூட்டியே படித்து விடுகிறார். மெஸ்ஸியை யாராவது நிறுத்த முடியும் என்றால் அது ஸ்பெயின் அணியால் மட்டுமே முடியும் என்று கால்பந்து உலகம் நம்புகிறது. ஆனால், இந்தத் தொடர் முழுவதும் அவரை பிடிப்பது என்பது பட்டாம்பூச்சி வலையை வைத்துக்கொண்டு புகையைப் பிடிக்க முயல்வது போலத்தான் இருக்கிறது.
