அறங்காவலர் பணிக்கான தகுதிகள்:
* விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
* எந்தத் திருக்கோயில் அறங்காவலர் பணிக்கு விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கிறாரோ, அக்கோயில் அமைந்துள்ள அதே மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
* விண்ணப்பதாரர் சமூகத்தில் நன்னடத்தையும், நல்ல பெயரும் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
* குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவராகவோ அல்லது நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவராகவோ இருக்கக் கூடாது.
* அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் திருக்கோயிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகள் ஏதும் இருக்கக் கூடாது.
* இதற்கு முன்னதாக அறங்காவலர் பதவியில் இருந்து ஒழுங்கீனமான செயல் காரணமாக நீக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆகஸ்ட் 20, மாலை 5:45 வரை.
இன்னும் விண்ணப்ப கால அவகாசம் ஒரு மாதம் வரை இருந்தாலும், தேவையான ஆவணங்களுடன் உடனே விண்ணப்பிப்பது தான் சிறந்தது.
