​உயிர் காக்கும் மருந்துகளே ஆபத்தா? – ஆய்வில் சிக்கிய 159 தரமற்ற மருந்துகள்!

மருத்துவச் சந்தையில் போலியான மற்றும் தரமற்ற மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்கவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மருந்து தர ஆய்வுகள் அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் தரமற்ற மருந்து விற்பனை கண்டறியப்பட்டால, கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் மாநில மருந்து சோதனை ஆய்வகங்களின் மூலம் 113 மருந்து மாதிரிகளும், மத்திய மருந்து சோதனைப் பிரிவுகளின் மூலம் 46 மருந்து மாதிரிகளும் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும், மருந்துகளை வாங்கும் போது குறைந்தபட்சம் காலாவதி தேதியைப் சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருந்து தர சோதனையின் போது அசாம் மாநிலத்தில் ஒரு போலி மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இது குறித்த தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. தரமற்ற மருந்துகளின் பட்டியலில் பாராசிட்டமால், ஆன்டி-பயாடிக் மருந்துகள், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள், இருமல் மருந்துகள் மற்றும் வைட்டமின் சத்து மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் குறிப்பிட்ட உற்பத்தித் பேட்சுகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

மருந்துகள் தர ஆய்வில் சிக்கிய மருந்துகள் குறிப்பிட்ட சில தயாரிப்பு பேட்சுகள் மட்டுமே. இதன் காரணமாக சந்தையில் கிடைக்கும் மற்ற அனைத்து மருந்துகளும் முழுமையாக தரமற்றவையாக இருக்குமோ என பொதுமக்கள் பயப்பட வேண்டாம். காலாவதி தேதியை சரிபார்த்து வாங்கினாலே போதும் என மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

Source link