LIC, EPFO உரிமை கோரப்படாத பணம்! ஆன்லைனில் எடுப்பது எப்படி?

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இந்தியாவின் மிகப்பெரிய அரசு காப்பீட்டு நிறுவனம் மற்றும் முதலீட்டுக் குழுமமாகும். இது தனிநபர் ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள், மைக்ரோ காப்பீடு மற்றும் யூலிப் (ULIP) போன்ற பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. எல்ஐசி பாலிசிகள் இந்திய அரசு உத்தரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால நிதிப் பாதுகாப்பை வழங்குகின்றன.

இதற்கிடையே எல்ஐசி பாலிசி முதிர்வடையும் தொகையை பெறமுடியாமல் போனால், அந்த தொகை எல்ஐசியால் ‘உரிமை கோராப்படாத தொகை’ (Unclaimed Amount) என்று ஒதுக்கி வைக்கப்படுகிறது. அதாவது பாலிசிதாரர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்டவர், பாலிசி முதிர்வடையும்போதோ, வாரிசுரிமைப் பலன் கிடைக்கும்போதோ அல்லது மரணம் ஏற்படும்போதோ தொகையைக் கோரத் தவறினால், அந்த நிதி ‘கோரப்படாத நிதி’யாகிவிடும்.

நிதி அமைச்சக தகவலின்படி, எல்ஐசியில் கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி பாலிசிதாரர்களிடம் இருந்து உரிமை கோரப்படாத ரூ.5,564 கோடி, உரிமை கோரப்படாத தொகையில் இருந்து பெறப்பட்ட வருவாய் ரூ.1753 கோடி என ரூ.7 ஆயிரத்து 318 கோடி உள்ளது.

அதாவது மார்ச் 31, 2026 நிலவரப்படி மொத்தம் ரூ.7,318.50 கோடி உரிமை கோரப்படாத நிதி உள்ளது.

Source link