நீட் எதிர்ப்பு போராட்டம்: மெரினாவில் குவிக்கப்படும் போலீஸ்

டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கின்றன. நேற்று (ஜூலை 22) எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுமட்டுமின்றி மாநிலக் கல்லூரி மற்றும் புதுக் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் வரலாற்றில் இடம் பெறும் அளவிற்கு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

இந்நிலையில் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதராவாக பேசி வரும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் ரத்து ஒன்றே நிரந்தரத் தீர்வு எனத் தெரிவித்துள்ளார்.

Source link