முக்கிய விவரங்கள் :
பாடத்திட்டம்: கணிதம் மூலம் சிந்தனை திறனை வளர்க்கும் 10 வார ஆன்லைன் பயிற்சி. அவ்வப்போது பயிற்சிகள் (Assignments) வழங்கப்படும்.
கட்டணம்: முற்றிலும் இலவசம்.
கால அளவு: மொத்தம் 4 நிலைகள் (Levels) உள்ளன. ஒவ்வொரு நிலையும் 10 வாரங்கள் நடக்கும்.
கலந்து கொள்ள தகுதியானவர்கள் : 5 முதல் 11-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணிதத்தில் ஆர்வம் உள்ள எவரும் இதில் சேரலாம்.
இந்த பயிற்சி திட்டத்தின் முதல் நிலையில் புதுமை சிந்தனை, புதிர்களை தீர்ப்பது, எண்களின் வரிசைமாற்றம், தேதி எண்களின் வரிசை மாற்றம், ஒற்றை-இரட்டை எண்கள், தலைமைத்துவ திறன், கணித அறிவு மேம்பாடு, மறைப்புக் கணிதம் மற்றும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து சிந்தனையை வளர்க்கும் சுவாரஸ்யமான முறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.
கற்றலில் ஆர்வமுள்ள எவரும் இந்த இலவசப் பயிற்சித் திட்டத்தில் இணையலாம். மாணவர்கள் வாரத்திற்கு 2 மணி நேரம் வீதம், 10 வாரங்கள் இணையவழியில் பயிற்சி பெற வேண்டும்.
