மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது? பட்ஜெட்டுக்கு முன்பே கைவிரித்த தவெக அரசு..!

இதற்கிடையே, தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகவும், சுமார் 10 லட்சம் கோடி கடன் இருப்பதால் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என கேள்வி எழுந்திருந்தது.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள கருத்து அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் செங்கோட்டையனிடம் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், தமிழகம், 13 லட்சம் கோடியே 32 லட்சம் ரூபாய் கடனில் உள்ளது. இவற்றை சரிசெய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. முந்தைய திமுக அரசு தங்களது வாக்குறுதியான ரூ.1,000 தொகையை உடனடியாக வழங்காமல் இரண்டரை ஆண்டுகள் கழித்துத்தான் வழங்கியது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், எங்களை மட்டும் ஏன் இப்போதே கேட்கிறீர்கள் என்றார்.

இதன்மூலம், வரும் பட்ஜெட்டில் ரூ.2,500 அறிவிப்பு வெளியாவது சந்தேகம் தான் என்கின்றனர்.

Source link