அதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஆதரவளித்த நிலையில் தனிப்பெரும்பான்மை நிரூபித்து தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் தமிழக அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் பங்கேற்றனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனை தொடர்ந்து இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, சி.விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவின் இணைந்தனர்.
ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகள் மற்றும் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
