தவறான போக்சோ விழிப்புணர்வு: SSI சுமதி அதிரடி நீக்கம்!

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தக் காணொளி போக்சோ சட்டத்தைத் தவறாக சித்தரிப்பதாலும், பொய்யான சட்ட நடவடிக்கை மூலம் குழந்தைகளை அச்சுறுத்துவதாலும் நிறைய விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது மாணவர்களுக்கு பாலினம் மற்றும் வன்முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக, சிறுவர்களை அச்சுறுத்துவதாக சமூக ஊடகங்களில் நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குழந்தைகளுடைய மனதில் தேவையற்ற அச்சத்தை விளைவிக்கும் என்றும், அத்துடன் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்றும் பலர் சுட்டிக்காட்டி உள்ளனர். இதற்கு முன்பு துன்புறுத்தலை தவிர்ப்பதற்கு பெண்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்ட மற்றொரு காணொளி வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

போக்சோ சட்டம் பாலினப் பாகுபாடு அற்றது என்றும், அது சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் அல்லது சுரண்டல் ஆகிய வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சிறுமிகளிடம் பேசுவதற்காக மட்டும் இதனைப் பயன்படுத்த முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும் இது போன்ற எச்சரிக்கைகள் மாணவர்களின் எதிர்காலத் தனிமனிதத் திறன்களை பாதிப்பதுடன் எதிர்பாலினத்தவருடனான அவர்களின் தொடர்புகளையும் பாதிக்கப்படும் என்ற கவலைகளும் எழுப்பப்பட்டன.

சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து, முறையான வழிகாட்டுதல்களையும் விழிப்புணர்வு நெறிமுறைகளையும் பின்பற்ற தவறியதால், SSI சுமதி ‘சிங்கப்பெண்’ அதிரடிப் படையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் பழைய இடமான அரியலூர் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

Source link