மியூசிக் டைரக்டர் கெனிஷா: இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராக இருந்து வரும் ரவி மோகன் An Ordinary Man எனும் படம் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும் அந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார் ரவி. இந்நிலையில் தான் அந்த படம் குறித்து புது தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது ரவி மோகன், யோகி பாபு படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது தெரபிஸ்ட்டும், பாடகியுமான கெனிஷா பிரான்சிஸை தான் An Ordinary Man படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து ரவி மோகன் தரப்பில் இருந்து இதுவரை உறுதி செய்யவில்லை.
கம்பானியன் கெனிஷா: ரவி மோகன் படம் மூலம் தான் சினிமாவில் இசையமைப்பாளராகவிருக்கிறார் கெனிஷா. ரவி படத்தில் கெனிஷா என்பதால் அந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்களை பழைய விஷயங்களை பற்றி பேச வைத்திருக்கிறது. 2024ம் ஆண்டு மனைவி ஆர்த்தியை பிரிந்த போது தன் தெரபிஸ்டான கெனிஷா பிரான்சிஸ் தான் தோழியாக இருந்து அந்த நேரத்தில் தனக்கு உதவி செய்தார் என்றார் ரவி மோகன்.
பின்னர் அவரை தன் கம்பானியன் என்று அறிமுகம் செய்து வைத்தார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு ரவி மோகன், கெனிஷா பிரான்சிஸ் தங்க நிற உடையில் வந்த வீடியோ அப்பொழுது வைரலானது. தன் பட விழாக்கள், கோவில்களுக்கு கெனிஷாவை உடன் அழைத்துச் சென்றார்.
ஒரு கட்டத்தில் தான் ரவி மோகனை பிரிவதாகவும், சென்னையில் இருந்து கிளம்புவதாகவும், சோஷியல் மீடியாவில் இருந்து கிளம்புவதாகவும் தெரிவித்தார் கெனிஷா. ஒரு பிரேக்கிற்கு பிறகு அவர் தற்போது இன்ஸ்டாகிராமுக்கு திரும்பி வந்துவிட்டார். இந்நிலையில் தான் ரவி மோகன் பட வாய்ப்பு கெனிஷாவுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்த்தி, சுஜாதா: இதற்கிடையே எவளாச்சும் ஹீல் செய்கிறேன் என வந்தால் ஹீல்ஸாலேயே அடிக்கவும் என ஆர்த்தி ரவி ஸ்டோரி போட, அது கெனிஷாவுக்கு தான் என பேசப்பட்டது. மேலும் ஆர்த்தியின் அம்மாவோ, கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இன்ஸ்டாகிராமில் சில ஸ்டோரிகள் போட அது மருமகன் ரவி மோகனுக்கே என்றார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் தான் எடுத்தவரை படத்தை தன் குரு மோகன் ராஜா மற்றும் பெற்றோருக்கு போட்டுக் காண்பித்திருக்கிறார் ரவி மோகன். படம் ரொம்ப நல்லா வந்திருக்குப்பா என அவர்கள் பாராட்டவே அந்த சந்தோஷத்தில் டான்ஸ் ஆடியதை வீடியோவாக எடுத்து வெளியிட்டார் ரவி மோகன்.
ரவி மோகன் மகன்கள்: ஆர்த்தி தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு தொடர்ந்த வழக்கில் அந்த தொகையை கொடுக்க வேண்டியது இல்லை மாதம் ரூ. 3 லட்சம் கொடுத்தால் மட்டும் போதும் என ரவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக வெளியான தகவல் குறித்து ரசிகர்கள் விவாதித்தார்கள்.
அதை பார்த்த ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமாரோ தீர்ப்பின் முழு விபரம் தெரியாமல் விமர்சிக்கிறார்கள். ஆர்த்தி ஒன்னும் ரூ. 40 லட்சம் கேட்கவில்லை. பெத்த பிள்ளைகளுக்கான சாப்பாட்டு காசை கூட ரவி மோகன் தரவில்லை.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அந்த இரண்டு பசங்களுக்கு வருடத்திற்கு ரூ. 86 லட்சம் ஃபீஸ் கட்டுகிறோம். அதையும் ரவி கொடுக்கவில்லை. என் மகளுக்கு நடந்த கொடுமை எல்லாம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்று கண்ணீர் விட்டார் சுஜாதா என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
