ராகுல், பொதுமேடைகளில் பேசும் பேச்சுக்களில், 80 சதவீதம் வரை, பொய்களே என்பது மக்களுக்கு மிக நன்றாக தெரியும். தமிழகத்தைச் சேர்ந்த சசிகாந்த், சுதா மற்றும் இன்ன பிற காங்கிரசாரின், ‘ஹீரோ ஒர்ஷிப்’ பெல்லாம், தமிழகத்துடன் நிற்க வேண்டிய நிலை தான் இப்போது!
நம் வாசகர்களான முதலாளிகள், உஷாராக, சுறுசுறுப்பாக, அன்றைய நிகழ்வுகள் பற்றிய கேள்விகளை, அன்று மாலையிலேயே எனக்கு இ – மெயில் மூலம் அனுப்பி விடுகின்றனர்! அதனால் தான், ‘டாண் டாண்’ என்று உடனுக்குடன் பதில் அளிக்க முடிகிறது!
லோக்சபாவில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், சபையை நடத்த விடாமல் பார்த்துக்கொள்கிறது; தமிழகத்தில் அமைச்சரவையில் பங்கு பெற்று விட்டதாலும்; பெரிய அளவில் பேசும் அளவுக்கு, சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இல்லை என்பதாலும், ‘கப்சிப்’ என அமர்ந்து விட்டது; அவ்வளவு தான் வித்தியாசம். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என நினைத்து, ‘அடித்து’ விடுகிறார் ப.சிதம்பரம்!
அடுத்த, 20 ஆண்டுகளுக்கு, ஏ.ஐ., தொழில்நுட்பம் தான், நம் நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பயன்படப் போகிறது. அதற்கான கல்வியை, பள்ளியிலேயே சொல்லிக் கொடுக்கும் திட்டம் மிகச் சிறந்ததே!
அந்தந்த மாவட்டத்தில் விளையும் பொருட்கள், கிடைக்கும் கனிமங்கள் மற்றும் ஏற்கனவே செயல்படும் நிறுவனங்களை கணக்கெடுத்து, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தினால், பலருக்கும் வேலைவாய்ப்பும், தொழில்வாய்ப்பும் கிடைக்கும். தமிழகம் மேலும் முன்னேற்றமடையும்.
இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு பிளஸ் இது. பகை நாடுகளின், கடலுக்கடியிலான சதித் திட்டங்களை கண்காணிக்கவும், இயற்கைப் பேரிடர்களை கண்டறியவும், இடர் ஏற்பட்டால் மிக அதிக அளவில் பயன்படவும் இந்த கப்பலால் முடியும்!
