அரசு பெண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! இனி 3-வது குழந்தைக்கும் ஓராண்டு ஊதியத்துடன் விடுப்பு..!

இந்தியாவில் மகப்பேறு நலச் சட்டம் (Maternity Benefit Act) மூலம் பணிபுரியும் பெண்களுக்கு பல்வேறு உரிமைகளும் விடுப்புகளும் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் தமிழக அரசு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு முதலில் 90 நாட்களாக (3 மாதங்கள்) மட்டுமே இருந்தது. அதுவே 2011-ல் 6 மாதங்களாகவும், 2016-ல் 9 மாதங்களாகவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு முதல், இரண்டு குழந்தைகளுக்கு ஒரு வருடமாக (365 நாட்கள்) முழு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களாக (84 நாட்கள்) மட்டுமே இருந்து வந்தது. இதனை 365 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற பல நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு, தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போது, மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பையும் 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

Source link