சென்னையில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கான தேவை குறித்து விரிவாக பேசியிருக்கிறார். தற்போதைய தலைமை செயலகத்தை விரிவாக்கம் செய்ய முடியாது எனவும், உயர்தர வசதிகள் உடன் கூடிய புதிய தலைமை செயலகம் கட்டப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே புதிய தலைமை செயலகம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, இன்றைய தினம் (செப்டம்பர் 3, 2026) முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 20 லட்சம் சதுர அடியில் மிகவும் பிரம்மாண்ட தலைமை செயலகம் கட்டப்படும். இதில் அதிநவீன வசதிகள் பலவும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source link
