Saturn Transit Effects In 2027,2027 சனிப்பெயர்ச்சி: அடுத்த 2 ஆண்டுகளில் சவால்களை சந்திக்கக்கூடிய 3 ராசிகள் – saturn transit 2027 in aries: these 3 zodiac signs that may face challenges over the next two years

சனி பெயர்ச்சி 2027 ஜூன் 3ம் தேதி நிகழ்வு உள்ளது. தற்பொழுது குரு பகவானின் ராசியான மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். அடுத்து மேஷ ராசிக்கு அடுத்த ஆண்டு பெயர்ச்சியாக உள்ளார். சனி பகவானின் இந்த பெயர்ச்சி காரணமாக சில ராசிகள் பாதகமான விளைவுகளை சந்திப்பார்கள். எந்த ராசிக்கு பாதிப்பு அதிகம் ஏற்படும், கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.

நவகிரகங்களில் அமைதிக்கு அதிபதி என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக கூடியவர். தற்பொழுது மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். அடுத்த ஆண்டு 2027 ஜூன் 3ம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது சனி பகவான் எந்தெந்த ராசிகளுக்கு சாதகம் மற்றும் பலனை தருவார் என்று தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசியில் சனிப்பெயர்ச்சி 2027

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு பெயர்ச்சியாக கூடிய சனி பகவான், 2027 ஜூன் மாதம் மூன்றாம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசி அதிபதியான செவ்வாய் மற்றும் சனி கிரகங்கள் பகை கிரகங்களாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகின்றன. இதன் காரணமாக சனி பகவானின் இந்த பெயர்ச்ச்சி காரணமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதாகவே இருக்கும்.

2027 ஜூன் 3 அன்று மேஷ ராசிக்கு சனியின் நுழையக்கூடிய நிலையில், அதன் பிறகு, சனி வக்ர கதியில் (பின்னோக்கிய இயக்கத்தில்) மீண்டும் மீன ராசிக்குத் திரும்புவார். 2028 பிப்ரவரி 23 அன்று, சனி நிரந்தரமாக மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.

மேஷ ராசியில் சனியின் பெயர்ச்சியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 3 ராசிகள்:

மேஷ ராசி

சனி பகவான் உங்களுடைய ராசிக்கு பெயர்ச்சியாவதால், அடுத்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு ஜென்ம சனி நடக்கும். இதன் தாக்கம் காரணமாக உங்களுக்கு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படும். அதனால் எந்த விதம் உடல் ஆரோக்கியம் பிரச்சினைகளிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.
​குடும்ப தேவைகள் மற்றும் உடல் நலம் தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். இதனால் நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் உங்களுடைய வேலை தொழில் போராட்டமான சூழல் இருக்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் பல்வேறு கருத்து வேறுபாடுகள், சச்சரவுகளை சந்திக்க நேரிடும். நீங்கள் வாக்குவாதங்களை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். இந்த சமயத்தில் உங்களுடைய வருமானம் குறைவதோடு செலவுகளும் அதிகரிக்கும்.

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களுக்கு ஏழரை சனியின் முதல் பகுதியான விரய சனி தொடங்க உள்ளது. இதனால் பல்வேறு புதிய சிக்கல்களை எதிர்க்கலாம் நேரிடும். உடல் மற்றும் மனதளவில் சில தொந்தரவுகளை அனுபவிக்க வாய்ப்பு உண்டு. அதனால் உங்களுடைய சுறுசுறுப்பையும், உடல் உழைப்பை அதிகரிக்கவும். பெரிய உடனடியாக பிரச்சனைகளை கூட சரியாக கவனிக்கவும்.

சனி பகவானின் தாக்கம் காரணமாக ரிஷப ராசியினர், வெளியுறவுகளில் விரிசல் ஏற்படலாம். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலை அல்லது தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் தேவையற்ற செலவுகள் உங்களை தொந்தரவு தரும். நீங்கள் ஏதேனும் கடன் வாங்கி இருந்தால் அதை திரும்ப செலுத்துவதில் அக்கறை காட்டவும். இல்லை எனில் மேலும் கடன் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கும். சிலருக்கு கண் வலி அல்லது தலை வலியை போன்ற தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படும்.

மீன ராசி

மீன ராசி நண்பர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள், சனி பகவானின் ஏழரை சனியின் கடைசி பகுதி நடக்க உள்ளது. இந்த காலத்தில் உங்களுக்கு சற்று நிவாரணம் தரக்கூடியதாக இருந்தாலும், நிதி நிலைமை தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் வரவு செலவு தொடர்பான திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும்.உன்னுடைய தொழிலில் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ள நேரிடும். சிலருக்கு மனநலம் தொடர்பான பாதிப்பு ஏற்படும்.
இந்தக் காலத்தில் உங்களுடைய தன்னம்பிக்கை குறைவாக காணப்படும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளும், வருமானத்தை விட செலவுகள் அதிகரிப்பதால் மனக்கவலையும் ஏற்படலாம்.
இருப்பினும் இந்த காலத்தில் உங்களின் ஒழுக்கம், இறை பக்தி மற்றும் பணத்தை பட்ஜெட் போட்டு செலவிடுவதால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

சனியின் அசுப விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்

மேஷ ராசிக்கு சனி பகவானின் பெயர்ச்சியால் சில ராசிகள் சங்கடங்களை சந்தித்தாலும் அதிலிருந்து நிவாரணம் பெறும் விதத்தில் சில வழிபாடுகள் உங்களுக்கு உதவும்.

குறிப்பாக சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதும், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அரச மரத்தின் முன் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நன்மை தீரும். மேலும் சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது நன்மை தரும்.
அடிக்கடி அருகில் உள்ள சிவபெருமான் கோயிலில் வழிபாடு செய்ய தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.

Source link