ஹாய் ராதிகா: விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா முதல் முறையாக ஜோடியாக நடித்த ஹாய் படம் திரைக்கு வந்த 7 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 7. 37 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் ஹாய் படக்குழு சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அதில் ஹாய் படத்தில் நடித்த ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது, நான் கவின் நடித்த டாடா படம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கவினை பாராட்டினேன். அதன் பிறகு அவர் நடித்த ஒரு படத்தை பார்த்துவிட்டு நீங்கள் அந்த படத்தில் நல்லாவே இல்லை, படமும் நல்லா இல்லை என்றேன். நான் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார் கவின். நீங்கள் வளர்ந்து வரும் நடிகர். நீங்கள் எப்படி அது மாதிரி படத்தில் நடிக்கலாம், அப்படி பண்ணக் கூடாது என்றேன். நீங்கள் சொல்வது சரி தான் என்றார் கவின். நாம ஏன் இப்படி கருத்து சொல்கிறோம் என எனக்கு தோன்றியது என்றார்.
ராதிமா கவின் மீதான அக்கறையில் தான் நீங்கள் அப்படி உரிமையோடு கருத்து சொல்லியிருக்கிறீர்கள். உங்களை போன்ற சீனியர்கள் அறிவரை சொல்வது கவினுக்கு நல்லது தான். அதனால் அதை நினைத்து ஃபீல் பண்ண வேண்டாம் என்கிறார்கள் ரசிகர்கள்.
நயன்தாரா பொறுமை: ஹாய் படத்தில் நடித்ததுடன் அதை தயாரிக்கவும் செய்தார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாராவின் வெற்றிக்கு காரணம் அவரின் பொறுமை என பாராட்டியிருக்கிறார் ராதிகா. நயன்தாராவை பார்த்தால் தான் சாப்ட்டாக தெரியும். ஆனால் ரொம்ப டஃப்பான ஆள். மனரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி நயன்தாரா ரொம்ப டஃப். அப்பப்பா அவருக்கு இருக்கும் பொறுமை இருக்கே. அது வேறு யாருக்கும் வராது என்றார். நயன்தாரா பற்றி ராதிகா சொன்ன ரகசியம் அவரின் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.
பாக்யராஜ் நடிப்பு: குடும்பங்கள் கொண்டாடும் ஹாய் படத்தை ராதிகா இன்னும் பார்க்கவில்லை. அதற்கு காரணம் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் இறந்த பிறகு வந்திருக்கும் படம் என்பதால் அதை பார்க்க தைரியம் வரவில்லை என்கிறார் ராதிகா. மாரடைப்பால் இறந்த பாக்யராஜ் நடித்த ஹாய் படத்தை அவரின் மனைவி பூர்ணிமா பார்த்துவிட்டு அழுதிருக்கிறார்.
ஹாய் ஷூட்டிங்ஸ்பாட்டில் நானும், ராஜாவும் சந்தோஷமாக பேசினோம். நான் பாக்யராஜை ராஜானு தான் அழைப்பேன். அவர் என்ன புள்ளனு கூப்பிடுவார். திடீரென்று இயக்குநர் நினைவில் அறிவுரை வழங்குவார். ராஜா, நீங்க இந்த படத்தை இயக்கவில்லை விஷ்ணு தான். நீங்கள் வெறும் நடிகர். அதனால் எதுவும் சொல்லக் கூடாது என்று அவரிடம் தெரிவித்தேன் என ஹாய் நிகழ்ச்சியில் கூறினார் ராதிகா.
நயன் ஹேப்பி: நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு நயன்தாரா வரவில்லை. இதையடுத்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் சார்பில் மீடியாவுக்கு நன்றி தெரிவித்தார் ராதிகா. முன்னதாக ஹாய் படத்தை விளம்பரம் செய்ய அளித்த பேட்டிகளில் கவினும், நயன்தாராவும் ஜாலியாக கலாய்த்து பேசியது ரசிகர்களை வியக்கவும், மகிழவும் வைத்தது. நயன்தாராவை இப்படி பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது என்றார்கள் அவரின் ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இதற்கிடையே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் எல்.சி.யு.வில் வரலாம் என அதன் ரிலீஸ் நேரத்தில் தான் சொன்னதை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் திட்டியதாக கூறினார் விஷ்ணு எடவன். உம் பாட்டுக்கு சொல்லிட்ட, என்னை பற்றி நினைச்சியானு லோகேஷ் அண்ணா கேட்டார் என்றார் அவர்.
Source link
