“தோனி விளையாட மாட்டார்” – முன்னாள் வீரர் உடைத்த ரகசியம்!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சில சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் சொதப்பி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஸ்டீபன் ஃபிளெம்மிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான பணியில் சென்னை அணி நிர்வாகம் இறங்கியது. இதன்படி சுரேஷ் ரெய்னா மற்றும் மைக் ஹஸ்ஸி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக பணியமர்த்த இதுவே சரியான நேரம் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அடுத்த சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா அல்லது விளையாட மாட்டாரா என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது.

கடந்த சீசனில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூட்டு வலி காரணமாக தொடர் முழுவதுமே அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி அடுத்த சீசனில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இம்பேக்ட் பிளேயராக விளையாட தோனி ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

Source link