அங்கு அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட விளையாட்டுகளில், த்ரோபால் அவர் மனதைக் கவர்ந்தது. பள்ளி முடிந்ததும் தனது தந்தையின் காய்கறி கடைக்கு உதவிய பின்னர் கடுமையான பயிற்சி எடுத்து, விரைவாக முன்னேறி இந்திய அணியில் இடம்பிடித்தார். 2015-ல் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் தனது முதல் சர்வதேச தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதைத் தொடர்ந்து, 2017-ல் காத்மாண்டுவில் நடந்த இந்தோ-நேபாள த்ரோபால் சாம்பியன்ஷிப், 2019-ல் பெங்களூருவில் நடந்த தெற்காசிய த்ரோபால் சாம்பியன்ஷிப் மற்றும் 2026-ல் ராஞ்சியில் நடந்த அதன் இரண்டாவது பதிப்பு ஆகியவற்றிலும் அவர் தங்கப்பதக்கங்களை வென்றார். இருப்பினும், இந்தப் பதக்கங்கள் அவருக்கு நிதிப் பாதுகாப்பையோ அல்லது அரசு வேலையையோ பெற்றுத் தரவில்லை.
இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக பலமுறை அதிக வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார் (உதாரணமாக மலேசியா செல்ல ரூ.65,000 கடன் வாங்கியுள்ளார்).
ஆனால் தற்போது அவருக்கு உரிய அரசு ஆதரவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாததால், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் அமர்தீப் குமார் தனது குடும்பத்தின் பொருளாதார சுமையை போக்கவும், வாங்கிய கடனை அடைக்கவும் ராஞ்சியின் வீதிகளில் காய்கறி விற்றுக் கொண்டும், வாடகை கார் ஓட்டியும் அவர் பிழைப்பு நடத்தி வருவதாக கூறினார்.
