ஐநா எச்சரிக்கை:
பூமியின் வெப்பம் இன்னும் சில ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை உச்சபட்ச நிலையை எட்டும். கடந்த 50 ஆண்டுகளில் காடுகள் அழிப்பு மற்றும் தொழில் வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் புவியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை சூப்பர் எல்-நினோவின் தாக்கம் அதிகரிக்கும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஐநாவும் எச்சரிக்கை எடுத்திருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கடுமையான வறட்சியும், சில நாடுகளில் வரலாறு காணாத வெள்ளமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலின் காரணமாக பனிப்பாறைகள் உருகுவது மேலும் தொடர்ந்தால், நேபாள் பெருவெள்ளம் போல் இந்த உலகம் மேலும் பல வெள்ளங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக தற்போது புவியின் வெப்பநிலையை உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் என ஐநா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகிளின் பங்களிப்பும், பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம்.
பருவகால மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் தத்தளிக்கிறது. இதிலிருந்து மீண்டு வர வேண்டுமாயின் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தி, இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
