இது தொடர்பாக, பின்வரும் ஆலோசனைகளை நான் முன்வைக்கிறேன்:
1. பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல்.
கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆவர்; மேலும் அவர்கள் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை வகிக்கின்றனர்.
தற்போது வழங்கப்படும் மதிப்பூதியம் முற்றிலும் போதுமானதாக இல்லை. உதாரணமாக, கிராம ஊராட்சித் தலைவர்களின் மாத மதிப்பூதியம் 2021-ஆம் ஆண்டில் ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக மாற்றியமைக்கப்பட்டது.
எனவே, அரசு இந்த மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்தி பின்வருமாறு நிர்ணயிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்:
கிராம ஊராட்சித் தலைவர் – மாதம் ரூ.16,000
கிராம ஊராட்சித் துணைத் தலைவர் மாதம் ரூ.10,000
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – மாதம் ரூ.8,000
இந்த உயர்வு, உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள நேரம், பொறுப்பு மற்றும் பொதுச்
சேவை ஆகியவற்றை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும்.
