பழைய சோஃபா மெத்தை சேகரிப்பு – சென்னை மாநகராட்சி இலவச சேவை

சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அத்துடன் எளிய வழியாக

பிரத்யேக WhatsApp: 94450 61913 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பலாம்.

பதிவு செய்தவர்களின் முகவரிக்கு மாநகராட்சி பணியாளர்கள் சனிக்கிழமையன்று நேரடியாகச் சென்று பொருட்களை சேகரிக்கின்றனர்.அப்படி

சேகரிக்கப்படும் பொருட்கள் முறையாக பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அறிவியல் முறையில் அகற்றப்படுவது சிறப்பு. .

மாநகராட்சியின் சமீபத்திய தகவலின்படி, 2026 ஆகஸ்ட் 29 அன்று மட்டும் 74 இடங்களில் இருந்து 25.2 மெட்ரிக் டன் பழைய சோஃபா, மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 ஜனவரி 10 நிலவரப்படி ஏற்கெனவே 1,769 பேரிடமிருந்து 664.68 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டிருந்ததாகவும் மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு மக்கள் பெரும் ஆதரவு தந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 11ல் இருந்து இதுவரை 39.93 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் என்ன பயன் என்று நினைக்க வேண்டாம். சோஃபா, மெத்தை போன்ற பெரிய பொருட்களை தெருவோரம் அல்லது குப்பைத்தொட்டியில் போடாமல், மாநகராட்சியே வீட்டுக்கு வந்து எடுத்துச் செல்வதால் சாலையோரக் குப்பை மற்றும் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவது குறையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அத்துடன் அதனால் ஏற்படும் மாசுபாடுகள் தரும் உடல்நலக் கேடுகளும் தவிர்க்கப்படும்.

இந்தச் சேவைக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்படவில்லை ஆதலால் தாராளமாக சென்னை வாழ் பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி சுகாதாரத்தை பேணலாம். மேலும் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டால் நல்லது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Source link