அதை சுற்றி பார்க்கவே, நம் வாழ்நாள் சரியாக இருக்கும். நம் சுற்றுலாத்துறையும் மேம்படும். இதை தான் பிரதமர் கூறியுள்ளார்!
நம் நாட்டிலும் அத்தகைய வாய்ப்பு ஏற்படலாம் என தோன்றுகிறது வள்ளி!
தமாஷ் என்று நீங்களே கூறிவிட்டீர்களே, ரெங்கநாதன். ‘டிவி’யில், ‘காமெடி’ பார்ப்பது போல், சிரித்து மகிழுங்கள்!
நக்சல் தீவிரவாதிகள், நம் நாட்டில் பல இடங்களில், நாச வேலைகளில் ஈடுபட்டு, பல இன்னல்களை செய்து கொண்டிருந்தனர். அமித் ஷா, அவர்களை இரும்பு கரம் கொண்டு கிடுக்கிபிடி போட்டு, ஆயுதங்களுடன் சரணடைய வைத்தார். அதேபோல், போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவையும் கொடுப்பார் என, எதிர்பார்ப்போம்!
மக்களுக்கு, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரித்து வைப்பதில் என்ன சிரமம் உள்ளது; மக்கள் கட்டாயமாக ஒத்துழைக்க வேண்டும். இல்லை எனில், பெருமழையால் வெள்ளம் போன்ற பேரிடர்களை சந்திக்க நேரிடும்!
தான் எப்படியும் படிக்க போவதில்லை, பிறருக்காவது உபயோகப்படட்டுமே என்ற நல்லெண்ணம் தான்; மனதார பாராட்டுவோம்!
