இதற்கு முக்கிய காரணம் போன் விலை ஏற்றம். ஸ்மார்ட் போன் உற்பத்திக்கான உபகரணங்கள் விலை உயர்ந்துள்ளதால் போன்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஸ்மார்ட் போன்களின் உற்பத்தி செலவு அதிகமாகி விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் சானிய மக்களால் புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியவில்லை. கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் (Counterpoint Research) மற்றும் ஐடிசி (ITC) போன்ற நிறுவனங்களின் தரவுகளின்படி, நடப்பாண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விநியோகம் ஆண்டு அடிப்படையில் 10% முதல் 11% வரை சரிவை கண்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் மொபைல் போன்கள் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றை ஊக்குவிக்க எதிர்வரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் 62,500 கோடி மதிப்பிலான மொபைல் போன் உற்பத்தித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
