மிசாவில் ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். தவெக அமைச்சர்கள் வரலாறு படிக்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை தியாகராய நகரில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் மிசா காலத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுப் பல கொடுமைகளைச் சந்தித்தனர். மிசா சிறைக் கொடுமைகள் குறித்த வரலாற்றை அமைச்சர்கள் முறையான ஆதாரங்களோடு படித்துப் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அது தொடர்பாக அரசுக்குத் தேவையான ஆலோசனைகளையும் சுட்டிக்காட்டல்களையும் தொடர்ந்து வழங்குவோம் எனத் தெரிவித்தார்.தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது என்பதைப் பி. சண்முகம் தெளிவுபடுத்தினார்.
இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகள் குறித்துப் பேச வருமாறு அழைப்பு விடுத்த போதிலும், புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற தவெகவின் யோசனை குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வெளியில் இருந்து தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்று கூறினார்.
