உணவில் உப்பைக் குறைக்க அதிரடி இயக்கம்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சோடியம் குறைவாக உள்ள மாற்று உப்பை மக்களுக்கு கிடைக்கச் செய்ய சில இடங்களில் முன்மாதிரியாக இந்தத் திட்டம் சோதிக்கப்படும் என்று கூறினார். சமூகநலப் பணியாளர்கள் மூலம் குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பைக் குறைப்பது குறித்த மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

உப்பு என்பது நம் நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்தி கையில் எடுத்த ஆயுதம்; தற்போது உப்புக் குறைப்பு என்பது மக்களின் நல் வாழ்விற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் நாம் எடுக்கும் ஆயுதம் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டமன்றத்தில் பேசும் பொழுது பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

உப்பு உபயோகத்தைக் குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற தொற்றாத நோய்கள் தமிழ்நாட்டில் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே உப்பை அளவோடு பயன்படுத்தி நலமாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Source link