த்ரிஷாவுக்கு எவ்ளோ நல்ல மனசு: மாளவிகா சொன்னதை கேட்டு பாராட்டும் ரசிகர்கள்

பேட்ட ஷூட்டிங்: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சர்தார் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் அவர். மேலும் கார்த்தி படம் குறித்து பேட்டிகளும் அளிக்கிறார்.

இந்நிலையில் த்ரிஷா கிருஷ்ணன் பற்றி பேசியிருக்கிறார் மாளவிகா. அவர் கூறியதாவது, பேட்ட தான் நான் நடித்த முதல் தமிழ் படம். அதற்கு முன்பு நான் சில படங்களில் நடித்தபோதிலும் பெரிய படங்களில் நடிக்கவில்லை. அதனால் நான் புதுமுகம். பேட்ட படத்திற்காக சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். நானும், த்ரிஷாவும் சேர்ந்து வரும் காட்சிகள் இருந்தது.

மாளவிகா நெகிழ்ச்சி: த்ரிஷா என்னிடம் ரொம்ப நன்றாக பழகினார். நான் புதுமுகம் என்று இல்லாமல் ரொம்ப சவுகரியமாக உணர வைத்தார் அவர். வாரணாசி அருகில் படப்பிடிப்பு நடந்தது. நானும், அவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தோம். வெளியே செல்ல திட்டமிட்டால் என்னையும் அழைத்துச் செல்வார். என்னை தனியாக விடவில்லை. எதை செய்தாலும் அதை முழுமனதுடன் செய்வார். ரொம்ப genuine. த்ரிஷா செய்தது ரொம்ப ரொம்ப அரிது. நான் ஏன் எல்லோரிடமும் நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும் என நினைத்து பேசாமல் அமைதியாக இருப்பவர்கள் அதிகம். ஆனால் த்ரிஷா அப்படி இல்லை. ரொம்ப அன்பாக இருந்தார்.

வாழ்த்திய த்ரிஷா: பேட்ட படத்தில் நடித்து முடித்து சில மாதங்கள் கழித்து எனக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த தகவல் கிடைத்ததும் எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்தினார். ஹே பேப், உனக்காக சந்தோஷப்படுகிறேன். இது பெரிய வாய்ப்பு, வாழ்த்துக்கள் என வாழ்த்தினார் த்ரிஷா. அதற்கு பெரிய மனது வேண்டும் என்றார்.

த்ரிஷா பற்றி மாளவிகா மோகனன் பேசியதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். தலைவிக்கு பொய்யாக பேசிப் பழகத் தெரியாது. யாராக இருந்தாலும் அன்பாக இருப்பார். அதனால் தான் புதுமுகமாக இருந்தபோதிலும் உங்களை அவ்வளவு அன்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அது தான் தலைவி என்கிறார்கள்.

த்ரிஷா புதுப்படம்: த்ரிஷா தற்போது ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் அந்த பட வேலைக்காக லண்டனில் இருக்கிறார். தன் புதுப்படம் குறித்து த்ரிஷா அறிவிக்கும் முன்பு அவர் லண்டன் சாலையோரம் ஒரு கடையில் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகி வைரலானது.

த்ரிஷா ஏன் லண்டனுக்கு சென்றார் என ஆளாளுக்கு கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் என் மகளும் அங்கு இருக்கிறார் என அவந்திகாவும், சவுத் குயினும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு என் டார்லிங்ஸ் என்றார் குஷ்பு சுந்தர்.

அய்யோ தலைவி, இந்த லண்டன் விசிட் எதற்கு என ரசிகர்கள் குழம்பிய நேரத்தில் தான் பனோரமா ஸ்டுடியோஸின் அறிவிப்பு வந்தது. அடேங்கப்பா பெரிய படத்தில் நடிப்பதை இப்படி யாருக்கும் தெரியாமல் வைத்திருந்திருக்கிறீர்களே என்றார்கள் ரசிகர்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அந்த படம் தவிர்த்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் கார்த்தி உடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் த்ரிஷா. மேலும் மா இன்ட்டி பங்காரம் படத்தை இயக்கிய நந்தினி ரெட்டியின் புது வெப்தொடரிலும் நடிக்கிறாராம் த்ரிஷா.

Source link