பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: செப். 10-ல் கஜமுக சூரசம்ஹாரம், செப். 13-ல் தேரோட்டம்!

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மூலவர் இதேபோல் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அலங்காரத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள்.

அதனை தொடர்ந்து 14-ந்தேதி திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருள்கிறார். அங்கு அவருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.

தொடர்ந்து மதியம் மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் அன்றைய தினம் இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான 10 விழா நிறைவடைகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவில் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Source link