நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வென்றனர். இவர்கள் இருவருமே தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதால் இடைத்தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
ராஜினாமா செய்த பிறகு இடைத்தேர்தலில் எங்களுக்கு தவெக வாய்ப்பு வழங்கும் என இவர்கள் இருவருமே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பே வழங்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்ட்டது.
இதற்கு பதலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “இடைத்தேர்தலில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை முதல்வர் விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார்” எனத் தெரிவித்தார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்த நிலையில், இடைத்தேர்தலில் அமமுக மற்றும் பாஜகவின் ஆதரவை நாடியுள்ளது அதிமுக. மேலும் பாமகவின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் இடைத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
