தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டு, புதிய தேதியாக செப்டம்பர் 25, 2026 தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டம், முதலில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொள்வதன் காரணமாக இத் திட்டத்தின் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். புதிய அறிவிப்பின்படி செப்டம்பர் 25ஆம் தேதி மதுரை உசிலம்பட்டியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்தார். மேலும் இந்தத் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்ற குழந்தைகள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இந்த குழந்தைகளுக்கு 22 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட ஒரு கிராம் தங்க மோதிரம் தாய்மாமன் சீராக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
