திருப்பதி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காப்பீடு – தேவஸ்தான நிர்வாகம் முடிவு..!

குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.

ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அனைத்து பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இலவச காப்பீடு வழங்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பொதுவாக விபத்துகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், திருப்பதியில் முதன்முறையாக புதிய நடைமுறை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

Source link