இந்தியாவில் மட்டும் புகைப் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அருகில் இருப்பவர்கள் சுவாசித்து, அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிககை 1990-ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 50% உயர்ந்துள்ளது.
இதில் 2023-ம் ஆண்டில் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என ‘தி லான்செட் பப்ளிக் ஹெல்த்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், Second-Hand Smoke பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில், உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மக்கள் தொகை பெருக்கத்தில் மட்டுமல்ல, Second-Hand Smoke என்ற பாதிப்பிலும் இந்தியா 2-ம் இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகையே பிடிக்காமல் நோய்களுக்கு ஆளாகும் கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் தனிமனித ஒழுக்கமும், விழிப்புணர்வும் அவசியம். புகைப் பிடிப்பவர்களின் அருகில் செல்லாமல் இருப்பதே இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி.
