மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வருகின்ற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி குடமுழுக்கு பெருவிழா நடைபெற இருக்கிறது. இந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், மதுரையில் பாதுகாப்பை பலப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மதுரையில் கும்பாபிஷேக தினத்தன்று (செப்டம்பர் 17) கோயிலைச் சுற்றி இருக்கும் 4 மாட வீதிகளில் உள்ள கட்டடங்கள் மற்றும் மேற்கூரைகளின் மீது பொதுமக்கள் ஏறுவதற்கு தடை விதித்துள்ளது மதுரை மாநகராட்சி. கும்பாபிஷேகத்தின் போது கூட்ட நெரிசல் மற்றும் எதிர்பாரா விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7:40 மணி முதல் காலை 8:10 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கோயில் கும்பாபிஷேகம் இது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பக்தர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
