ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையைப் பறிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சீரழித்து விடும் என ஐநா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. ஏஐ டேட்டா சென்டர்களை அமைக்க கோடிக் கணக்கிலான லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதால் இது உலகளாவில் தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
ரோபோக்கள் அறிமுகத்திற்கு வந்த போது, இதனால் மனிதர்களின் வேலை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரோபோக்களை விடவும் அதிசக்தி வாய்ந்த ஏஐ தொழில்நுட்பம் தற்போது உலகையே ஆள்கிறது.
வருங்கால பாதிப்புகளை எடுத்துரைககும் விதமாக போலந்து நாட்டில் நடத்தப்பட்ட போராட்டமானது, மற்ற நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தை ரோபோ என்ற தொழில்நுட்பமே எதிர்த்த இந்த சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தாலும், மனிதர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இதற்கு முன்பு வரை மனிதர்களுக்கு மனிதர்களே போட்டியாக இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தொழில்நுட்பத்துடன் போட்டியிட வேண்டிய சூழலில் உள்ளனர்.
அதற்கேற்ப ஏஐ வரவால் நிறுவனங்களின் ஆட்குறைப்புப் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் சூழலியல் அரசியலைப் புரிந்து கொண்டு, இந்த டிஜிட்டல் புரட்சியை மனிதர்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டும்.
