இடைத்தேர்தல்.. படுவேகம் காட்டும் திமுக.. பொறுப்பாளர்கள்…

மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் திமுக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் (தனி) தொகுதிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திமுகவின் பிரசாரத் திட்டமும் வேகம் எடுத்துள்ளது. வரும் 15ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தவுடன், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முதற்கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரு தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link