குட் நியூஸ்.!! காவல் துறையில் 30,000+ காலிப் பணியிடங்கள்.! விரைவில் வரப்போகும் மெகா அறிவிப்பு.!

தமிழக காவல் துறையில் நிலவுகின்ற ஆட்கள் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், வெகு விரைவில் 29,108 புதிய பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் விஜய் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையில் அதிகளவில் நிரப்பப்படும் இத்தகைய காலிப் பணியிடங்களால், காவலர்களின் பணிச் சுமை கணிசமாகக் குறையும். அதோடு குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் வலுப்பெரும்.

குற்றம் நடந்த பிறகு தண்டனை வழங்குவதை விடவும், குற்றம் நடக்காமல் தடுப்பது தான் சிறந்தது என சட்டசபையில் முதல்வர் பேசினார். மேலும் குற்றம் நடப்பதற்கான சூழலைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க வேண்டும் எனவும் முதல்வர் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தெரிவித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாகவே தற்போது காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Source link