“மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்”

முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிரான மிகப்பெரிய பேரலை உருவாகி உள்ளது. இன்னும் 10 தினங்களில் அது சுனாமியாக மாறி எங்கள் அணிக்கு மிகப்பெரிய வெற்றி தரும். பெண்களின் முழு ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளது. இந்த தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை மக்களவை தேர்தல் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் என்பது அதிமுகவுக்கும் திமுகவுக்குமான தேர்தல். மத்திய அரசை பற்றி ஏன் தேவையில்லாமல் பேசுகிறார், பிரதமர் மோடி மீது ஏன் ஸ்டாலினுக்கு பயம்? திமுக வேட்பாளர்களுக்கு ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை.

Source link