மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா? – நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு| M.P kanimozhi speech at parliment regarding delimitation

அதன்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை தீர்மானிக்கலாமா?

மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 850- ஆக உயர்த்தப்பட்டால், பேச கூட வாய்ப்பு கிடைக்காது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா? எம்.பி.க்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும் போது, எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும்.

குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில்கூட, தெற்கு மாநிலங்களுக்கு பங்களிப்பே இருக்காது. பாஜக சொந்த சதித் திட்டத்தை நாட்டின் மீது சுமத்துவதற்காகவே தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது.

பெரும்பான்மை உள்ள கட்சி விருப்பம் போல் தொகுதி மறுவரையறையை செய்து நாட்டினுடைய அரசியல் சூழலையே மாற்ற முடியும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று பேசியிருக்கிறார்.

Source link