ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அண்ணன் தம்பி வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி தொகுதியில் 2019, 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் போட்டியிட்டனர்.
இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர். இந்த இரண்டு தேர்தல்களிலும் மகாராஜனே வெற்றி பெற்றார். இந்நிலையில், இவர்கள் எதிரெதிரே களம் இறங்கி உள்ளனர். இம்முறை மகாராஜனின் வெற்றி ஹாட்ரிக் ஆக இருக்குமா? அல்லது லோகிராஜன் இந்த தடவை வெற்றியை கைப்பற்றுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
