“பிரதமரை மந்திரவாதி என்பதா?” – ராகுல் காந்தி மன்னிப்பு கோர கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமரை மந்திரவாதி என குறிப்பிடுவதா என ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமரை மந்திரவாதி என குறிப்பிட்டுப் பேசினார்.

“இந்த மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்கு தெரியும். அவர்கள் முட்டாள்கள் அல்ல. எதிர்க்கட்சிகள் இந்த அளவுக்கு கடுமையாக இதை எதிர்ப்பதால் இது நிறைவேறாது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆளும் கட்சியின் இந்த முயற்சிக்கு முக்கிய காரணம் ஒரு மந்திரவாதி. அந்த மந்திரவாதி நமது நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்ற விரும்புகிறார். பெண்களுக்கு ஆதரவானவர் என தன்னை காட்டிக்கொள்ள விரும்புகிறார்.

Source link